சீனாவும் கனடாவும் நான்கு துறைகளில் நல்ல கூட்டாளிகளாக இருக்க வேண்டும்
கனடாவின் தலைமையமைச்சர் கார்னி சீனாவில் ஜனவரி 14 முதல் 17ஆம் நாள் வரை பயணம் மேற்கொண்டார். சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அவரைச் சந்தித்த போது, இரு தரப்பும் பரஸ்பர மதிப்பளித்தல், கூட்டு வளர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகிய நான்கு துறைகளில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றார். இருதரப்பு உறவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க உத்தி நோக்கு வழிகாட்டலை இது வழங்குகிறது. இரு நாடுகளின் கூட்டறிக்கையில், பொருளாதார மற்றும் வர்த்தகம், எரியாற்றல், கலாசார பரிமாற்றம் முதலிய துறைகளில் சாதனைகளை ஊக்குவிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும், எட்டு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின. இது சீனா-கனடா உறவுகளின் சீரான வளர்ச்சி போக்கை வலுப்படுத்தியுள்ளது.
18-Jan-2026