போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் முழு அமர்வில் உரைநிகழ்த்திய ஜாவ் லெஜி
சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, 26ஆம் நாள் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் முழு அமர்வில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங், இலங்கை நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், வணிகம், சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
27-Mar-2026